ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டப்பட்ட பெண் - தகாத உறவால் பயங்கரம்!
ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வெட்டிக்கொலை
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(34). சைதாப்பேட்டையை சேர்ந்த டக்கா மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ராஜேஸ்வரி தனது கணவர் இறந்தவுடன் புவனேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். மேலும், ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில்,
தீவிர விசாரணை
ரயிலில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உடனே அங்கிருந்த போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதன்பின் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ராஜேஸ்வரிக்கு மூன்றாவதாக வேறொருவருடன் ததாக உறவு இருந்தது வந்ததும். அந்த நபர் கொலை செய்யப்பட்டதால் மற்றொரு நபருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அதன்பின், மீண்டும் இரண்டாவது கணவர் புவனேஷீடன் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் கொலை செய்யப்பட்டுள்ளாரா என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.