குப்பை லாரியில் பெண்ணின் சடலம் - லிலிங் டூ கெதரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

Attempted Murder Bengaluru Crime
By Sumathi Jun 30, 2025 10:57 AM GMT
Report

லிவிங் டூ கெதரில் வாழ்ந்த பெண்ணை, நபர் கொன்று உடலை குப்பை லாரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிவிங் டூ கெதர்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷம்சுதீன். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான இவர், வேலை காரணமாக பெங்களூருவில் தனியாக வசித்து வந்துள்ளார்.

குப்பை லாரியில் பெண்ணின் சடலம் - லிலிங் டூ கெதரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்! | Woman Killed Body Dumped Garbage Living Bengaluru

அப்போது தன்னுடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய ஆஷா என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். அந்த பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - குற்றவாளி மனோஜித் சைக்கோ என குற்றச்சாட்டு

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - குற்றவாளி மனோஜித் சைக்கோ என குற்றச்சாட்டு

பெண் கொடூரக் கொலை

இந்நிலையில் இருவரும் நெருங்கி பழகியதால், ஒரே வீட்டில் கணவன் - மனைவி போன்று லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ஆஷா இரவில் மது போதையில் நண்பர்களுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறாகியுள்ளது.

குப்பை லாரியில் பெண்ணின் சடலம் - லிலிங் டூ கெதரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்! | Woman Killed Body Dumped Garbage Living Bengaluru

சம்பவத்தன்று சண்டை எல்லை மீறியதால், ஷம்சுதீன் ஆஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின் உடலை கட்டி, பெரிய கவரில் வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே எடுத்து வந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த மாநகராட்சி குப்பை லாரியில் உடலை வீசிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் அடிப்படையில் சம்சுதீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.