கணவன் கண் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்

Sexual harassment Rajasthan Crime
By Sumathi Nov 13, 2022 10:12 AM GMT
Report

கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம கும்பல்

ராஜஸ்தான், சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 45வயதுள்ள பெண். இவரது கணவர் அப்பகுதியில், காவலாளியாக வேலை செய்து வருகிறார். இருவரும் வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு தூங்கத் தயாராகி உள்ளனர்.

கணவன் கண் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம் | Woman Gang Raped In Front Of Husband Rajasthan

அப்போது திடீரென அடையாளம் தெரியாத 4 நபர்கள் கொள்ளையடிப்பதற்காக அத்துமீறி நுழைந்துள்ளனர். தொடர்ந்து தம்பதிகளை மிரட்டி அவர்களுடமிருந்த ரூ.1400ஐ வாங்கியுள்ளனர். மேலும் பணம் இல்லை என கூறியுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

ஆனால் அதை பொருட்படுத்தாமல் நபர்கள் வீடு முழுவதும் தேடி உள்ளனர். மேலும், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கணவன் முன்னே மனைவியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அங்கிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். அதனையடுத்து, போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.