கொரோனாவின் கோரம்! இறந்த மகனுடன் வீடியோவி்ல் பேசும் தாய்- நெஞ்சை உருக்கும் சம்பவம்
கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை இழந்து தவிக்கிறோம், தங்களுடைய பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்கள் என இழந்து வாடும் உறவுகளை எப்படி தேற்றுவது? என அல்லல்படுகிறோம்.
இதற்கு உதாரணமாக நெஞ்சை உருக்கும் சம்பவம் தான் குஜராத்தில் நடக்கிறது, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே இறந்து போன மகனுடன் வீடியோ காலில் அடிக்கடி பேசி வருகிறார் அவரது தாய்.
அகமதாபாத்தில் 1200 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை முன்பு வந்து நிற்கும் தாய், தன்னுடைய மகனுடன் பேசுகிறார்.
எப்படி இருக்கிறாய் மகனே? நன்றாக சாப்படுகிறாயா? நீ சீக்கிரம் குணமடைந்து வருவாய்.. நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என பாசத்துடன் கூறுகிறார்.
இதைப்பார்த்ததும் அருகில் இருப்பவர்களின் கண்கள் குளமாகின்றன, காரணம் அவர் மகன் இறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது, மரணிப்பதற்கு 5 நாட்கள் முன்பாக தாயுடன் பேசியுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்து தற்போதும் அந்த தாய் பேசிக்கொண்டிருக்கிறார், தன் மகன் உயிருடன் இல்லை என தெரிந்தும் அதை ஏற்க அவரது மனம் மறுக்கிறது, இவருக்கு ஆறுதல் கூறி தேற்றமுடியாமல் தவிக்கின்றனர் உறவினர்கள்.