ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை சீரழித்த இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்
ஆசைக்கு இணங்க மறுத்த ஒரு பாலியல் பெண்ணின் மார்பகங்களை பிளேடால் சரமாரியாக கிழித்த இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, புனேவில் உள்ள புதுவார்பேட்டை என்ற இடத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த விபச்சார விடுதியில் 2000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடத்திற்கு நூற்றுக்கும்பேட்ட ஆண்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், அந்த இடத்திற்கு சில நாட்களுக்கு முன்பு புனேவின் வாதார்வாடி பகுதியை சேர்ந்த ராஜப்பா (40) என்ற நபர் வந்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் உறவு கொள்ள ரேட் பேசி உள்ளார்.
அப்போது அவர் கேட்ட தொகைக்கு அப்பெண் உறவுக்கு வர மறுத்திருக்கிறார். ஆனால், ராஜப்பா மீண்டும் மீண்டும் வேண்டுமென்று அப்பெண்ணிடம் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், அப்பெண் முடிவாக மறுத்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த ராஜப்பா பிளேடை எடுத்து அப்பெண்ணின் உடல் மற்றும் மார்பகங்களை கிழித்து காயப்படுத்தியிருக்கிறார்.
அப்பெண் கத்தி அலறி துடிக்கவே, அந்த இடத்தைவிட்டு ராஜப்பா தப்பியோடி இருக்கிறார். இது குறித்து போலீசாரிடம் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை பதிவு செய்த போலீசார் ராஜப்பாவை தேடி கைது செய்துள்ளனர்.