பழங்குடியின பெண்ணை நடுரோட்டில் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த 9 பேர் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவில் குரி பாலா என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்தக் கிராமத்தில் 35 வயதுமிக்க பழங்குடியின பெண் தனது குடும்பத்துடன் ஒரு அரசாங்க இடத்தில் வாழ்ந்து வந்துள்ளார். அந்த இடம் தொடர்பான அப்பகுதியைச் சேர்ந்த 9 பேர் பழங்குடி இன குடும்பத்திடம் பிரச்சினை செய்துள்ளனர்.
குடும்பத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அந்த குடும்பத்தை துன்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்தக் குடும்பம் அங்கிருந்து இடத்தை காலி செய்யவில்லை.
இதனையடுத்து, கடந்த 19ம் தேதி, அப்பெண்ணை அந்தக் கும்பல், நடுரோட்டில் வைத்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி அந்தக் கும்பல் தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளது.
இதன் பின்பு, அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுணா, லலிதா, சென்னகேசவா உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.