இ-ரிக்சா ஓட்டுநரின் கன்னத்தில் 17 முறை தாக்கிய பெண் கைது..!

Uttar Pradesh
By Thahir Aug 14, 2022 06:22 AM GMT
Report

நொய்டாவில் இ-ரிக்ஷா ஓட்டுநரின் கன்னத்தில் 90 வினாடிகளில் 17 முறை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓட்டுநரை தாக்கிய பெண் கைது 

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இ-ரிக்ஷா ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது ஓட்டுநர் தவறுதலாக பெண்ணை தொட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் ரிக்சா ஓட்டுநரை தாக்கினார். 90 வினாடிகளுக்குள் அந்த பெண் ரிக்சா ஓட்டுநரை 17 முறை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இ-ரிக்சா ஓட்டுநரின் கன்னத்தில் 17 முறை தாக்கிய பெண் கைது..! | Woman Arrested For Slapping E Rickshaw Driver

மேலும் ஓட்டுநரிடம் பணத்தையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இ-ரிக்சா ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

போலீசார் அவர் மீது சிஆர்பிசி பிரிவு 151, 107 மற்றும் 116 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடுரோட்டில் ரிக்சா ஓட்டுநரை பெண் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.