பூனையாக மாறும் பெண்; பிளவுபட்ட நாக்குடன் உடலில் 72 துளைகள் - விநோத ஆசை!
மனித பூனையாக மாற 20 வயது பெண் ஒருவர் உடலில் 20 மாற்றங்களை செய்துள்ளார்.
பூனையாக மாறும் பெண்
சமூக வலைத்தளங்களில் லைக்குகள் மற்றும் புகழுக்காக பலர் வித விதமான செயல்கள் செய்து வருகின்றனர். அதில் சிலர் தங்களது உடலை வருத்திக்கொண்டு விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் சிலர் உயிரை கூட பணயம் வைக்கிறார்கள். அந்த வகையில், இத்தாலி நாட்டை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் சியாரா டெல்அபே (22). இந்த பெண் மனித பூனையாக மாற வேண்டும் என்பதற்காக தனது உடலில் 20 இடங்களில் மாற்றங்கள் செய்துள்ளார்.
இந்த ஆர்வம் அவருக்கு 11 வயதில் ஏற்பட்டுள்ளது. அதற்காக தனது உடலில் துளைகள் போடுவது, பச்சை குத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். தற்போது சியாராவின் உடலில் சுமார் 72 துளைகள் உள்ளன.
உடல் மாற்றங்கள்
இதில் மூக்கு மற்றும் மேல் உதடு பிளவுபட்ட நாக்கு ஆகியவை அவரது உடல் மாற்றங்களில் அடங்கும். இதுதொடர்பான வீடியோக்களை உருவாக்கி டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்களை ஏராளமானோர் பார்த்துள்ளனர்.
இவ்வளவு மாற்றங்கள் செய்து இன்னும் முழு பூனையாக மாறவில்லை என்றும் இன்னும் நிறைய இருக்கிறது என்றும் சியாரா கூறியுள்ளார். அதற்காக பூனை போன்ற கண்களுக்கான பிரத்யேக அறுவை சிகிச்சை, பற்களில் மாற்றம், வால் போன்ற அமைப்பு இணைத்தல், தேவைப்படும் இடங்களில் பச்சை குத்துதல் பல்வேறு மாற்றங்கள் செய்ய உள்ளாராம். மேலும், இந்த செயல்களால் ஏற்படும் காயம் மற்றும் வலி தனக்கு பழகிவிட்டது என்றும், அது இனி பெரிய விஷயமில்லை என்றும் சியாரா கூறியுள்ளார்.