‘‘பாஸ் ஒரு போட்டியில ஜெயிக்கிறது பெரிய விஷயமே இல்ல , எங்க குறிக்கோள் இது தான்’’ - விராட் கோலி ஓபன் டாக்

virat southafrica viratkohli
By Irumporai Dec 16, 2021 09:07 AM GMT
Report

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதற்காக இந்திய வீரர்கள் தயாராகி வருவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தநிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான எதிர்வரும் டெஸ்ட் தொடர் குறித்து பேசியுள்ள இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி, தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி : 

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என முழுமையாக நம்புகிறேன். தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற்றது.

அடுத்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும் அந்த இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி பெரிதாக நம்மை ஆதிக்கம் செலுத்தவில்லை. ஓரிரு சிறிய தவறுகளால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது. வெளிநாட்டு தொடர்களில் எங்களால் வெற்றி பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.