விலகிய எடப்பாடி - கூட்டணிக்கு முனைவர்களா ஓபிஎஸ் - டிடிவி? சசிகலா முடிவென்ன..?
பாஜகவிடம் இருந்து எடப்பாடி தரப்பு விலகியிருக்கும் நிலையில், அக்கட்சியுடன் கூட்டணிக்கு செல்ல டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலாவின் ஆதரவு இருக்கும் என அதிகளவில் கருத்துக்கள் எழுந்து வருகின்றது.
விலகிய எடப்பாடி
கட்சியின் தலைமை பொறுப்பை நேரத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானவை அது பாஜகவுடன் அவர் காட்டிய இணக்கமான நிலைப்பாடே. தொடர்ந்து பாஜகவின் சட்ட மசோதாக்கள் பலவற்றை கூட்டணியில் இருக்கும் காரணத்தினால் மட்டுமே அதிமுக வரவேற்கிறது என்று கூறினாலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால், அண்ணாவின் பேரை கொண்ட அதிமுக, கடைசியாக அண்ணாவை அண்ணாமலை விமர்சித்தததை தொடர்ந்து கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது தேர்தலை எவ்வாறு பாஜக சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜகவின் கூட்டணியில் யார்..?
தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழகத்தில் பொறுத்தவரை அதிமுகவை அடுத்து பெரிய கட்சி என்றால் அது பாமக தான். பாமகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தற்போது கூறமுடியாது என்றாலும், பாமகவின் தலைவர் அன்புமணி ராம்தாஸ் ராஜ்யசபா எம்.பி'யாக இருக்கும் சூழலில் அக்கட்சி பாஜகவின் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
அதே போல, தற்போது எடப்பாடி தரப்பு வெளியேறியுள்ளதால், தாங்களும் அதிமுக தான் என கூறி வரும் ஓபிஎஸ் தரப்பு மற்றும் சசிகலா இருவரும் பாஜகவிற்கு தங்களது ஆதரவை தருவார்கள் என்றே பெரிதளவில் நம்பப்படுகிறது. அதே போல, டிடிவி தினகரனின் அமமுகவும் அந்த பக்கம் செல்லவே வாய்ப்பிருக்கிறது. அதே போல, இதில் புதிய தமிழகம் கட்சி மற்றும் ஜி.கே.வாசனின் த.மா.க போன்ற கட்சிகளும் பாஜகவின் ஆதரவையே எடுக்கும் என நம்பப்படுகிறது.
3-வது அணியை தற்போது இணைக்கும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள பாஜக, தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பிருகிறது. ஆனால், தேமுதிகவின் நிலைப்பாடு தற்போது வரை கேள்விக்குறியான ஒன்றேயாகும்.