இன்னிக்கு சென்னை அணி அவ்வளவு தான் - மிரட்டல் விடுக்கும் சிராஜ்

IPL2021 RCBvCSK
By Petchi Avudaiappan Sep 24, 2021 03:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

சென்னை அணிக்கு தனது பந்துவீச்சின் மூலம் நெருக்கடி கொடுப்பேன் என பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் சீசனின் 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில்  டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் படிக்கல் 70 ரன்களும், கேப்டன் விராட் கோலி 53 ரன்களும் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 

இதனிடையே போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அளித்த பேட்டியில், அணியின் சக வேகப்பந்து வீச்சாளர்கள் சைனி, ஜேமிசன் ஆகியோருடன் நான் ஆலோசனை செய்துள்ளேன். டெத் ஓவர்களில் யார்க்கர், ஸ்லோ பால் என நிறைய முயற்சிகளை வலை பயிற்சியின் போது வீசி பரிசோதித்துப் பார்த்தேன். அதை ஆட்டத்திலும் வீசுவேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த போட்டியில் எனது பங்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் சென்னை அணிக்கு அழுத்தம் கொடுப்பேன் எனவும் சிராஜ் கூறியுள்ளார்.