ராமநாதபுர தொகுதியில் திமுகவிற்கு ஆதரவளிக்க தயார்....சீமான் அதிரடி
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் திமுகவிற்கு ஆதரவளிக்க தயார் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி, இந்த தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி சீமான் ராமநாதபுரத்தில் சீமான் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடுவேன் என தெரிவித்திருக்கிறார். இது பெரும் விவாதங்களை இருக்கும் நிலையில், தற்போது சீமான் மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு ஆதரவளிக்க தயார்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசும் போது, ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே கைவிட்டுள்ள நிலையில், திமுக நேரடியாக களமிறங்கினால் தான் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அவ்வாறு நேரடியாக திமுக வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் தான் ராமநாதபுரத்தில் இருந்து பின்வாங்குவது மட்டுமின்றி, திமுகவிற்கு ஆதரவளிக்கவும் தயார் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.