விராட் கோலி 100-வது டெஸ்ட் போட்டியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் - ராகுல் டிராவிட்

Virat Kohli Rahul Dravid Put An End To Controversies
By Thahir Jan 02, 2022 07:30 PM GMT
Report

விராட் கோலி பங்கேற்கும் 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.

டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது தன்னை யாரும் தொடர்புகொண்டு பேசவில்லை என விராட் கோலி கூறினார்.

ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கோலியிடம் கேப்டனாக நீடிக்க வலியுறுத்தினோம் என கூறி வருகின்றனர்.

இவர்களுடைய கருத்து குறித்து கோலி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக ஜனவரி 11-ம் தேதிக்கு முன் விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்து பதிலளிப்பார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:- விராட் கோலி தன்னை சுற்றி நடக்கும் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

அவர் ஜனவரி 11-ம் தேதி கேப் டவுனில் நடைபெற இருக்கும் தனது 100-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார். போட்டிக்கு முன்னதாக நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் கோலி பதிலளிப்பார். இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23