அதிமுக தனித்து போட்டியா..? சட்டென பதிலளித்த செல்லூர் ராஜு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுமா? என்ற கேள்விக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.
வெளியேறிய அதிமுக
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மாநில தலைமையை சுட்டிக்காட்டி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது.இதன் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தமிழகத்தை பொருத்தமட்டில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளது.
இது குறித்தான பேச்சுவார்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து தொடர்ந்து பல கேள்விகள் எழுந்து வருகின்றது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், இது அரசியல் பேசும் இடமில்லை என கூறி, இங்கு தொகுதி வேலை காரணமாகவே வந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், கூட்டணி மற்றும் தேர்தலில் தனித்து போட்டியா? என்பது போன்ற கேள்விகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் தான் அறிவிப்பார் என கூறினார்.