பற்றி எரியும் துருக்கி : காட்டுத்தீயால் 8 பேர் உயிரிழப்பு
Turkey
Wild fire
By Petchi Avudaiappan
துருக்கியில் கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீயால் அப்பகுதியில் பெரும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
துருக்கியில் உள்ள மனாவ்கட், மர்மாரிஸ், மிலாஸ் உள்ளிட் இடங்களில் 5 நாட்களாக தீ எரிந்துக்கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற கடற்கரையொட்டிய பகுதிகளில் ஆரஞ்சு நிற புகையுடன் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க பல முயற்சிகள் எடுத்தாலும் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த தீ விபத்தில் மனவ்காட் பகுதியில் 7 பேர், மர்மரிஸ் பகுதியில் ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி தெரிவித்துள்ளார்.