போதை ஏறி போச்சு..சாராயம் குடித்து மட்டையான காட்டு யானைகள்
ஒடிஷாவில் காட்டு யானைகள் இலுப்பை சாராயம் குடித்து விட்டு காட்டு யானை கூட்டம் படுத்து உறங்கிய சம்பவம் ஒன்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாராயம் குடித்த யானைகள்?
இந்தியாவில் உள்ள பல்வேறு பழங்குடி இனக்குழுக்கள் இலுப்பை மர பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், இலுப்பை பூ சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அக்கிராமத்தின் அருகே உள்ள முத்திரிக்காட்டு பகுதியில் பெரிய பானைகளில் தண்ணீர் ஊற்றி அதில் இலுப்பை பூவை போட்டு ஊறவைத்துள்ளனர்.
அதில் இருந்து மக்குவா என்ற நாட்டு சாராணம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுநாள் வந்து பார்த்த போது பானைகள் எல்லாம் உடைந்து கிடந்துள்ளது.
அதன் அருகில் சுமார் 24 யானைகள் உறங்கி கொண்டுள்ளது. அதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் யானைகளை எழுப்ப முயன்ற போது யானைகள் திரும்பி கூட படுக்கவில்லை.
இதனையடுத்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மேளங்களை அடித்து ஒலி எழுப்பிய நிலையில் யானைகள் உறக்கம் கலைந்து காட்டுக்குள் ஓடின.
யானைகள் சாராயம் குடிக்கவில்லை என மறுத்துள்ளனர். ஆனால் கிராம மக்கள் பானைகள் உடைந்து கிடப்பதால் நிச்சம் சாராயம் குடித்து தான் மட்டையாகி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.