புருஷன் தொல்லை தாங்க முடியல...படுக்கையில் செங்கல் சுவர் எழுப்பிய மனைவி

By Petchi Avudaiappan Apr 23, 2022 05:31 PM GMT
Report

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை இறுதியில் எப்படியான முடிவை அப்பெண்ணை எடுக்க வைத்துள்ளது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பொதுவாக கணவன் - மனைவிக்கு இடையேயான சண்டை சகஜமான ஒன்று தான் என்றாலும் சில சண்டைகள் காமெடியாகவும், சில சண்டைகள் பரிதாபத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில்  ஒரு கணவன் மனைவி இடையேயான  சண்டை குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன்படி சண்டைக்கு பின்னே கணவர் பயமும் கோபமுமாக எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில், மனைவி எதையும் கண்டு கொள்ளாமல் படுக்கையில் செங்கல் சுவர் எழுப்பவதிலேயே குறியாக இருக்கின்றார்.இதனைப் பார்த்த பலரும் இந்த உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்பது எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.