ரயில் நிலையத்தில் இறந்த கணவரின் குரல்..20 ஆண்டுகள் கேட்ட மனைவி - திடீரென நடந்த சம்பவம்?
கணவர் இறந்த பின்னரும் ரயில் நிலையத்தில் ஒளிக்கும் அவரின் குரலை கேட்க ரயில் நிலையத்திற்கு பயணித்த மனைவி.
அறிவிப்பு குரல்
இங்கிலாந்து நாடு லண்டனை சேர்ந்தவர் மார்கரெட் மெக்கலம். இவரின் கணவர் ஆஸ்வால்ட் லாரன்ஸ் ஒரு பிரபலமான பேக்ரவுண்ட் வாய்ஸராக இருந்துள்ளார்.
இவர் கடந்த 1950 ஆம் ஆண்டு எம்பார்க்மென்ட் ரயில் நிலைய பயணிகளுக்காக Mind the gap, Please என்ற அறிவிப்பை பதிவு செய்து கொடுத்துள்ளார். இது இங்கிலாந்தில் உள்ள அண்டர்கிரவுண்டில் பயன்படுத்தப்படும் ஒரு அறிவுறுத்தலாகும்.
ரயிலை விட்டு பயணிகள் வெளியேறும்போது கவனமாக இருக்குமாறு பயணிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை பதிவாகும். இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்வால்ட் தனது 86 வயதில் உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பு மனைவி மார்கரெட்டை வெகுவாகப் பாதித்துள்ளது.
உயிருடன் இல்லையென்றாலும் அவரின் நினைவுகள் என்னுள் புதைந்துள்ளது என்ற மனநிலையில் கணவரின் குரலைக் கேட்க ஒவ்வொரு நாளும் 20 ஆண்டுகள் எம்பார்க்மென்ட் ஸ்டேஷனுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் மார்கரெட்.
குரலுடன் வாழும் மனைவி
ஆனால் திடீரென ஆஸ்வால்ட்டின் அறிவிப்பு குரலை ரயில் நிலையம் நிறுத்தியுள்ளது. இதனால் மனமுடைந்த மார்கரெட் அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்த போது, டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக படிப்படியாக நிறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த ரயில் நிலையத்திற்கும் மார்கரெட் தனது கணவரின் குரலை கேட்க பயணித்துள்ளார். ஆனால் அனைத்து இடங்களிலும் அந்த குரலே இல்லாமல் போயுள்ளது. இவரின் செயலை தினமும் பார்த்து வந்த ரயில்வே ஊழியர்கள் கணவரின் குரல் பதிவின் நகலை அவருக்கு வழங்க முடிவு செய்தனர்.
பல தேடலுக்குப் பிறகு எம்பார்க்மென்ட் ரயில் நிலையத்தில் அந்த பதிவின் நகலை மீட்டெடுத்து கொடுத்துள்ளனர். தற்போது வீட்டிலேயே தனது கணவரின் குரலுடன் வாழ்ந்து வருகிறார் மார்கரெட். இந்த காதல் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.