தன்னைவிட 13 வயது குறைந்தவருடன் மாயமான கோடீஸ்வரரின் மனைவி

madhyapradesh illegalrelationship
By Petchi Avudaiappan Oct 27, 2021 08:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மத்தியப்பிரதேசத்தில் தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுநருடன் கோடீஸ்வரரின் மனைவி மாயமாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இருந்த 47 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமாகி விட்டதாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து அப்பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிய போலீசார் அவரின் செயல்பாடுகள் குறித்து விசாரித்தனர்.

அப்போது அந்த பெண் வாடிக்கையாக ஆட்டோ ஒன்றில் பயணம் செய்வதற்காக அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது அந்த ஆட்டோ ஓட்டுநரும் அதே 13 ஆம் தேதியில் இருந்து மாயமாகி இருந்தது கண்டறியப்பட்டது. இருவரையும் தேடும் பணியில் காவல்துறையினர் இறங்கிய நிலையில் ஆட்டோ ஓட்டுநரின் பெயர் இம்ரான் எனவும் அவருக்கு 32 வயது ஆகிறது எனவும், இருவருக்குள்ளும் ரகசியமாக கள்ளத்தொடர்பு இருந்தது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநரான இம்ரானின் நண்பர் ஒருவரிடம் இருந்து கோடீஸ்வரருக்கு சொந்தமான ரூ.33 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

இதனிடையே அடிக்கடி தங்களின் இருப்பிடத்தை மாற்றி வரும் இந்த ஜோடியை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.