மனைவியை கொன்று, தந்தூரி அடுப்பில் உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரக் கணவன் - நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

shocking news husband arrest wife murder Cooking the body மனைவி உடலை சாப்பிட்ட கணவன்
By Nandhini Feb 14, 2022 06:12 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

2-வது திருமணத்துக்கு தடையாக இருந்த தனது மனைவியை உயிரோடு துடிக்க, துடிக்க வெட்டி சமைத்து சாப்பிட்ட கணவரை போலீஸ் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலைச் சேர்ந்தவர் மாவோரோ சம்பெட்ரி (59). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை மௌரோ சம்பீட்ரி காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை 2-வது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த தகவல் முதல் மனைவிக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது என்று மாவோரோ சம்பெட்ரியிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால், மாவோரோ சம்பெட்ரி 2-வது திருமணம் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தார். இதனால், இருவருக்குள்ளும் பயங்கரமான சண்டை வெடித்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவர், முதல் மனைவியை சராமரியாக வெட்டிச் சாய்த்தார்.

மீன் வெட்டுவதுபோல், முதல் மனைவியின் உடலை சிறு, சிறு துண்டாக வெட்டினார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், எந்த ஆதாரமும் கிடைக்கக் கூடாது என்பதற்காகவும், தந்தூரி அடுப்பில் உடலை சமைத்து சாப்பிட்டுள்ளார் மாவோரோ சம்பெட்ரி.

இதனையடுத்து, அக்கம், பக்கத்தினரிடம் தன் மனைவி வீட்டை விட்டு ஓடி விட்டதாக கூறி சமாளித்துள்ளார். ஆனால், இவர் மேல் அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டைச் சுற்றி சோதனை நடத்தினர். வீட்டின் அருகே அவரது உடலின் சில எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, குற்றவாளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், 2-வது திருமணம் செய்து கொள்ள அவரின் மனைவி தடையாக இருந்ததால் கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூர கொலையானது கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், 2வது திருமணம் செய்து கொள்ள சிறையிலிருந்து தப்பித்து சென்ற மாவோரோ, காதலியை திருமணம் செய்து கொண்டார். தலைமறைவாக இருந்த அவர், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது போலீசாரிடம் கையும், களவுமாக பிடிபட்டுள்ளார். 

மனைவியை கொன்று, தந்தூரி அடுப்பில் உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரக் கணவன் - நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Wife Murder Husband Arrest Cooking The Body