குடிபோதையில் வந்த கணவர்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

Attempted Murder Crime Death Thiruvallur
By Vinothini Sep 24, 2023 07:29 AM GMT
Report

கணவர் குடித்துவிட்டு வந்ததால் ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம மரணம்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் பகுதியில் வாணியன் சத்திரம் கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் கூழிதொழிலாளி ரமேஷ் (வயது 30), இவரது மனைவி தங்கலட்சுமி (27), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டில் ரமேஷ் கடந்த 11-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

wife-killed-her-drunken-husband

அப்பொழுது தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும், அவர் மூச்சு திணறலால் உயிரிழந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், அவரது மனைவி மீது சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்பொழுது அவரது மனைவி, " தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தினந்தோரும் என்னிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் கணவர் ரமேஷ் தன்னிடம் தகராறில் ஈடுபட்டார்.

wife-killed-her-drunken-husband

இதனால் ஆத்திரத்தில் அவர் தூங்கியபோது அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார். அதன்பிறகு போலீசார் அவரை கைது செய்தனர், பின்னர் திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.