பெண்ணா இல்லை பொருளா? - நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வற்புறுத்திய கணவர்

mayiladuthurai wifecomplaintagainsthusband
By Petchi Avudaiappan Oct 16, 2021 05:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள கணவர் வற்புறுத்தியதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் இளம்பெண் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம்  தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் அபிநயா என்பவர் பள்ளியில் படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரேம்குமார்  என்பவரைக் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அபிநயா மீண்டும் 12 ஆம் வகுப்பு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து முடித்துள்ளார்.

மேலும் திருமணத்தின்போது அபிநயாவின் பெற்றோர் 30 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சத்துக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பிரேம்குமார், மாமியார் மஞ்சுளா மற்றும் பிரேம்குமாரின் சகோதரர் ஆகியோர் அபிநயாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

உச்சக்கட்டமாக பிரேம்குமார் தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவந்து அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அபிநயாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு உடன்படாத அபிநயா அங்கிருந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து மணல்மேடு காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபிநயா புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் புகார் மனு அளித்தார். அதில் தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுத்து தனது பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.