நிலவின் தென்துருவத்தை குறிவைப்பது ஏன்? ஒளிந்து கிடைக்கும் அத்தனை ஆச்சரியங்கள்..!!
இந்தியாவின் சந்திரயான் விண்கலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்துள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படும் நிலையில், நிலவின் தென்துருவத்தில் மறைந்திருக்கும் ஆச்சரியங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நிலா பயணம்
நிலவின் மனிதம் முதன்முதலில் கால்பதித்து கிட்டத்தட்ட 54 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதும் நிலவை குறித்து மனித குலத்திற்கு தெரியாத பல மர்மங்கள் நீடித்து கொண்டே இருக்கின்றது. அதில் ஒன்று தான் நிலவின் தென் துருவம்.
[
பூமியில் இருந்து காணப்படுவது நிலவின் வடதுருவமாகும். அந்த இடங்களின் தான் தற்போது வரை உலகநாடுகள் ஆராய்ச்சியும், விண்கலங்களையும் அனுப்பி வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் நிலவின் தென்துருவ பயணங்கள் இது வரை தோல்வியையே அடைந்துள்ளது.
தென்துருவ ரகசியம்
நிலா ஆராய்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது தண்ணீர் இருப்பை கண்டுபிடிப்பது பற்றியே ஆரய்ச்சியே ஆகும். இதனை கடந்த 2009-இல் சந்திரயான் 1 விண்கலம் உறுதிப்படுத்திய நிலையில், அதனை அடுத்த ஆண்டே நாசாவும் உறுதிப்படுத்தியது.
நிலவில் உள்ள எரிமலைகள், வால்மீன்கள், நிலவில் இருந்து பூமிக்கு வந்த எரிகற்கள் மற்றும் கடல்களின் தோற்றம் ஆகியவை தொடர்பான பல்வேறு தரவுகள் தொடர்பான ஆரய்ச்சிகள் வடதுருவத்தில் நடைபெற்றது வருகின்றது.
எதனால் கடினம்
வடதுருவத்தில் நீராதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், தென் துருவத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்வி தற்போது வரை உலக ஆராய்ச்சியாளர்களிடம் நீடித்து வருகின்றது. முன்னதாக அமெரிக்கா, சீனா, இந்தியாவின் சந்திரயான் 2 மற்றும் அண்மையில் ரஷ்யாவின் லூனா 25 விண்கலங்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை தழுவியது. அப்படி அந்த தென்துருவத்தில் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏற்படலாம்?
எப்போதும் நிழல் சூழ்ந்த இருள் பரவி இருக்கும் இந்த பகுதி கருப்பு பகுதியாகவே அழைக்கப்படுகிறது. இதனால் தரையிறங்கும் போது பல்வேறு சவால்களை சந்திக்கவேண்டி இருக்கின்றது. இவ்வாற்றை கடந்து தான் இந்தியா நேற்று சாதனை படைத்துள்ளது.அங்கு தரையிறங்கிருக்கும் நிலையில், தென்துருவத்திலும் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? மற்ற ஏதேனும் கனிமங்கள் கிடைக்கப்பெறுமா? போன்ற பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கக்கூடும்.