ஒரே நாடு ஒரே தேர்தல்? எதற்காக எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள்?
நாடுமுழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறை படுத்துவதில் மும்முரம் காட்டி வரும் மத்திய அரசு அது குறித்து ஆய்வதற்காக ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்
வரும் நாடாளுமன்ற அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் 5 மாநில தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதா தற்போது மிகவும் கவனம் பெற்று விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் இணைந்து ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கப்படும். ஆனால், இதில் நிறைய சிக்கல்கள் நிலவுகின்றன. பல்வேறு மாநிலங்களில் வேறுவேறு காலகட்டங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில், அனைத்து மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சியை அவ்வளவு எளிதில் களைத்து விட முடியாது.
இது போன்ற நடைமுறை சிக்கல்களையும், சட்ட சிக்கல்களையும் குறித்து ஆராய தற்போது மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு இந்த மசோதா குறித்து ஆய்வுகளை நடத்தி மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்
இந்த திட்டத்தை பல கட்சிகளும் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது நாடாளுமன்ற தேர்தல் முடிவு எதிரொலியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் ஒரே நோக்கில் பல எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைந்துள்ளன.
அப்படி இணைந்துள்ள அணிகளில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வரும் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஒற்றுமையை குலைக்கவே இவ்வாறு ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் கூற்றாகும்.