கொரோனாக்காக இல்லை...இதற்காக தான் ஐபிஎல் போட்டிகள் துபாய்க்கு மாற்றம்...
இந்தியாவில் இருந்து ஐபிஎல் தொடர் துபாய்க்கு மாற்றப்பட்டது ஏன் என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தாலும், வீரர்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதாலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள போட்டிகளை முழுமையாக நடத்தி முடிக்காவிட்டால் பிசிசிஐக்கு கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதால் அந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார். செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். எனவே அப்போது ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது என்றும், இதன் காரணமாகத்தான் போட்டிகள் மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.