தங்கத்தால் ஜொலிக்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் மர்மம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்திரயான் 3 விண்கலம் தங்க நிறத் தகடால் மூடப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம்
இந்தியாவில் இருந்து நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்கலங்கள் திட்டம் தான் சந்திரயான். இதன் 3வது பகுதியான சந்திரயான் 3வது இன்று நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கவுள்ளது. இந்த திட்டத்தின் விக்ரம் லேண்டர் தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தங்க தகடால் மூடப்பட்டிருப்பது ஏன்?
அதற்கு பெயர் MLI- Multi-Layer Insulation எனப்படும். இந்த MLI என்பது மென் தகடுகளால் ஆனதாகும். அந்த மென் தகடுகள் பல அடுக்குகளில் ஒன்றின் மேல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். தங்க நிற மென் தகடுகள் வெளியேயும், வெள்ளை அல்லது வெள்ளி நிற தகடுகள் உள்ளேயும் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த தகடுகள் பார்ப்பதற்கு தங்கம் போல் இருந்தாலும், அவை தங்கத்தால் ஆனவை அல்ல என்பதே குறிப்பிடத்தக்கது. அவை பாலிஸ்டர் தன்மை கொண்ட பொருட்களால் ஆனவையாகும். இதன் மீது அலுமினியம் பூச்சு இருக்கும். இவை இரண்டும் சேர்த்து தான் இந்த மென் தகடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த தகடுகள் விண்கலத்தின் முழுவதிலும் இல்லாமல் சில முக்கியமான பகுதிகளை மட்டும் சுற்றி இருக்கும். இந்த தகடுகள் கதிர்வீச்சால் சேதமடையக்கூடிய பகுதிகளைச் சுற்றி மட்டுமே இருக்கும். இந்த தகடுகள் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து விண்கலத்தை காக்கவே வைக்கப்பட்டுள்ளன. விண்கலத்தின் கருவிகளில் உள்ள சென்சார்கள் விண்வெளி துகள்களால் சேதமடையவதை தடுப்பதற்காகவே இந்த மென் தகடுகள் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.