தமிழருக்கே முன்னுரிமை தராத நிறுவனங்கள் இங்கு வந்து என்ன பயன்? சீமான் சரமாரி கேள்வி!

M K Stalin Tamil nadu Seeman
By Swetha Aug 31, 2024 03:22 AM GMT
Report

தமிழர்களுக்கு வேலை தராத நிறுவனங்களை அழைத்து வருவது ஏன்?என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சீமான் கேள்வி

இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழருக்கே முன்னுரிமை தராத நிறுவனங்கள் இங்கு வந்து என்ன பயன்? சீமான் சரமாரி கேள்வி! | Why Bringing Industry That Wont Give Job To Tamils

ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நிறுவனம் பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைத்துவந்தபோதே கடும் எதிர்ப்பினை தெரிவித்த பிறகும் மீண்டும் மீண்டும் வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி,

தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.தமிழ் மக்களின் உழைப்பினையும், தமிழ் நிலத்தின் வளங்களையும் சுரண்டி தங்களை வளப்படுத்திக்கொண்ட பிறகு திடீரென நிறுவனத்தை மொத்தமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் ஊழியர்களை நட்டாற்றில் விட்டுச் செல்கின்றன.

31 நாட்களில் 133 படுகொலைகள்...என்ன பாதுகாப்பு இருக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு - சீமான்!

31 நாட்களில் 133 படுகொலைகள்...என்ன பாதுகாப்பு இருக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு - சீமான்!

என்ன பயன்? 

இதனால் வேலைவாய்ப்பும் இழந்து, வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர்.

தமிழருக்கே முன்னுரிமை தராத நிறுவனங்கள் இங்கு வந்து என்ன பயன்? சீமான் சரமாரி கேள்வி! | Why Bringing Industry That Wont Give Job To Tamils

தற்போது நோக்கியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.தனியார் நிறுவனங்கள் வடவர்களைப் பணியமர்த்தும் போக்கினைக் கட்டுப்படுத்த திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?

தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையைத் தமிழக அரசு சட்டமாக்கப்போவது எப்போது?

தமிழருக்கு வேலைவாய்ப்பளிக்காத தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதால் தமிழருக்கு என்ன பயன்? என்ற கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.