நான் ஏன் மன்னிப்பு கேட்கணும் : கொந்தளித்த அண்ணாமலை
பத்திரிக்கையாளர்களை தான் தவறாக பேசியதாக சித்தரித்து வீடியோ வெளியாகி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் செந்தில் பாலாஜியையும் , பத்திரிக்கையாளர்களையும் தவறாக பேசியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது .
இதனால் சில பகுதிகளில் திமுகவினர் அண்ணாமலையின் உருவ பொம்மையினை எறித்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கோவை குண்டு வெடிப்பு வழக்கினை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார்.
நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்
அக்.18ம் தேதியே மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது. 18ஆம் தேதியே தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை? பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து பரப்புகின்றனர்.
பத்திரிகையாளர்களிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.