ஜாமீன் மனு....விசாரிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம்...யார் விசாரிப்பது என்பதில் குழப்பம்.?

V. Senthil Balaji DMK Madras High Court
By Karthick Aug 31, 2023 06:14 AM GMT
Report

இலாகா இல்லாத அமைசர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து யார் விசாரிப்பது என்பதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு எடுக்கவேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி - ED

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த ஆவணங்கள் பற்றிய தகவலை பெற செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

who-will-investigate-senthil-balaji-jamen-petition

கடந்த 28-ஆம் தேதியுடன் அவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவரின் காவலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அந்த காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

தலைமை நீதிபதியிடம் முறையிடவும்

இந்நிலையில், இந்த மனுவை நேற்று விசாரித்த முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த மனுவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என தெரிவித்து, வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்தார்.

who-will-investigate-senthil-balaji-jamen-petition

அதனை தொடர்ந்து இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இந்த மனுவில், தலை=மை நீதிபதியிடம் முறையிடும் படி நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட உத்தரவிட்ட நீதிபதி சுந்தர், ஜாமீன் தரும் அதிகாரம் உயர் நீதிமன்றத்தில் இருந்து பெற்று வரும்படியும் அவர் தெரிவித்துள்ளார்.