யார் இந்த வீரலட்சுமி...நா யார்'னு தெரியாம பேசுறீங்க...கொந்தளித்த சீமான்
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் சீமான், வீரலக்ஷ்மியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
யார் இந்த வீரலட்சுமி
சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , வாங்குற சம்பளத்திற்கு காவல் துறையினர் கொஞ்சமாவது வேலை செய்யட்டுமே என கூறிய சீமான், 12 ஆண்டுகளாக வராத சம்மன் தற்போது வரும் காரணம் என்ன என வினவினார்.
மேலும் தன்னை நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கூறவில்லை என்றும் விளக்கமளிக்கும் படியே கூறினார்கள் என தெரிவித்து, தன் படத்தில் நடித்த விஜயலக்ஷ்மி குற்றசாட்டு வைக்கும் நிலையில், இதில் யார் வீரலட்சுமி என வினவினார்.
நா யார்'னு தெரியாம பேசுறீங்க.!
தனது வாய்க்கு வந்தபடி தன்னை தொடர்ந்து பேசி வரும் அவரிடம் சான்று இருக்கின்றதா என வினவி, பொறுமை இழக்கும் தன் கட்சியினர் வீரலக்ஷ்மியை தாக்கிவிட்டால் சட்டஒழுங்கு என்று தன் மீதே வழக்கு தொடுப்பார்கள் என்ற அவர், தான் ஜனநாயக வாதியாக இருப்பதே பிரச்சனையாக இருக்கிறது என கூறினார்.
தொடர்ந்து வீரலக்ஷ்மியை தரக்குறைவாக விமர்சித்த சீமான், பொள்ளாச்சி, ஸ்ரீமதி வழக்குகள் வராத வீரலட்சுமி தற்போது எங்கிருந்த வந்தார் என கட்டமாக கேள்வி எழுப்பிய சீமான், தன்னை ஏமாற்றி பணம் பறிக்கவே இது நடக்கிறது என கூறினார்.
அவதூறுகளால் தன்னை அழித்து விட முடியாது என கூறி, இதுவரை யாருமே வீரலக்ஷ்மியை யார் என்று வினவவில்லையே என்றும் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பி, இந்த வழக்கில் தன் சார்பாக தனது மனைவியே வக்கீலாக வருவார் என்றும் கூறினார்.