‘‘எனது நேர்மையைச் சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன்’’ - கமல்ஹாசன் ஆவேச பேச்சு

MNM kamalhassan doubt
By Irumporai May 11, 2021 10:54 AM GMT
Report

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் நடிகரான கமல்ஹாசன் தன் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல்முடிந்த பிறகு, நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தனது பணியை நிறுத்தாது எனவும் முன்பை விட வேகமாக செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெறுவோம் என பேசினார்.

மேலும் தனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல. என கூறிய கமல்ஹாசன் .

தனது நேர்மையைச் சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன் என ஆவேசமாக பேசினார்.

மேலும், நமது கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும், தற்போது கட்சியில் வரவிருக்கும் சீர்திருத்தங்கள் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்த கமலஹாசன்.

விலகி நிற்கும் ஊடகங்கள் நம்மை தேடி வரும் என தெரிவித்தார்.