இல்லத்தரசிகளின் கவனத்திற்கு - இனி மாதம் தோறும் எப்போது 1000 ரூபாய் வரும்..? வெளியான முக்கிய தகவல்
இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை துவங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
திமுக அரசு அளித்த முக்கிய வாக்குறுதியான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை இன்று நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். திராவிட கழகங்களின் முதன்மை தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் துவங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தமாக 1 கோடியே 6 லட்சம் பேர் பயன் பெறவுள்ளனர். இந்த திட்டத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், திராவிட கழகத்தின் முதன்மை திட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
எப்போது வரும்..?
இன்றைய தினம் துவங்கப்பட்டாலும், இனி மாதாமாதம் எந்த தேதியில் இந்த திட்டம் சரியாக மக்களை வந்தடையும் என்பது குறித்தான கேள்விகள் தற்போது அதிகளவில் எழுந்துள்ளது.இந்த திட்டத்திற்கான பணம் நேரடியாக வங்கி கணக்குகளில் போடப்படும் என்பதால் எந்த தேதி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி உரிய வாங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் முதல் தேதிகளில் சம்பள பரிவர்த்தனை நடைபெறும் பெரும் காரணங்களால் 15-ஆம் தேதி பணம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.