செல்போனில் இனி வாட்ஸ் அப் இயங்காது - பயனாளர்கள் அதிர்ச்சி
நவம்பர் 1 ஆம் தேதி முதல் செல்போனில் வாட்ஸ் ஆப் செயல்படாது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலுள்ள சமூக வலைதளங்களில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் ஆப் செயலி ஆகும்.இளம் தலைமுறை முதல் முதியவர்கள் வரை வாட்ஸ் அப் என்பது அன்றாட் பயன்படுத்தும் முக்கியமான செயலியாக இருந்து வருகிறது.
வாட்ஸ் ஆப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் கொண்டு வருவதால் பழைய செல்போனில் புதிய வசதிகள் இல்லாததால் இதை உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில்,சாம்சங் ஜே2 மற்றும் நோக்கியா நிறுவனத்தின் பழைய மாடல் செல்போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் மேலே குறிப்பிட்டுள்ள மாடல்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.