ராமருக்கும் கிரிக்கெட்டுக்கு என்ன சம்மதம்?? கொந்தளிக்கும் சீமான்..!!
அகமதாபாத் கிரிக்கெட் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் அதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராமருக்கும் கிரிக்கெட்டும் என்ன சம்மந்தம்
செய்தியாளர்கள் இது குறித்து சீமானிடம் வினவிய போது பதிலளித்த அவர், புனிதமான கடவுளை இவர்கள் இன்னும் கழிவறைக்கு மட்டுமே எடுத்து செல்லவில்லை என குறிப்பிட்டு, கோவிலில் வைத்து வணங்க வேண்டிய கடவுளை வீதிக்கு கொண்டு வந்தும், கடலில் போடுவதும் எதற்காக என்று வினவினார்.
கிரிக்கெட் மைதானத்தை உடுக்கை வடிவிலும், அங்கு இருக்கும் விளக்குக்களை திரிசூலம் வடிவிலும் அமைக்கும் இவர்கள், அங்கே ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடுகிறார்கள், இதே ஒரு கிறிஸ்தவ நாட்டிலோ அல்லது முஸ்லிம் நாட்டிலோ அவ்வாறு அவர்களின் கடவுளை குறித்து கோஷம் எழுப்பினால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு என்று வினவி, விளையாட்டை பகையாக பார்ப்பவர்களுக்கு பேச அருகை இருக்கிறதா என்ற சீமான், இந்நாடு ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்த போது, சுதந்திரத்திற்காக போராடிய பாகிஸ்தான், வங்காளதேசத்தவர்கள் என்றும் போராடாதவர்கள் ஆர் எஸ்எஸ் மற்றும் பாஜககாரர்கள் என்றும் குற்றம்சுமத்தினார்.
இதெல்லாம் அரை பைத்தியம்
அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் நட்பு நாடாக இருக்கும் நிலையில், சுதந்திரத்திற்காக போராடிய பாகிஸ்தான், வங்காளதேச பகையாக இருக்கிறது என்றால் உளவியலாக அவர்களுக்கு எதோ சிக்கல் இருப்பதாக குறிப்பிட்டு, 850 மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை நட்புநாடாக இருக்கும் நிலையில், இவர்கள் எவ்வாறு பகையாளியானார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், முழு பைத்தியம் யாருக்கும் தொந்தரவு அளிக்காது என்ற சீமான், இவர்களெல்லாம் அரை பைத்தியம் என்றும் அவர்களால் பிரச்சனை தான் என குறிப்பிட்டு இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.