கழட்டிவிட்டு அதிமுக...என்ன செய்யும் பாஜக...அண்ணாமலையின் பதவிக்கு சிக்கலா..?
கூட்டணி முறிவு குறித்து அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக இன்று சென்னை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டணி நடைபெற்று வருகின்றது.
கூட்டணி முறிவு
அதிமுகவின் முக்கிய தலைவர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என கூறியது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும், இது கட்சியின் கருத்து தான் என ஜெயக்குமார் கூறிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அவசர கூட்டம் கூட்டினார்.நேற்று பாஜகவின் துணை தலைவர்கள் நாராயணன் திருப்பதி, கரு நாகராஜன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாஜகவின் தலைவர்கள் இது அதிமுக தலைமையின் கருத்து இல்லை என்றும் ஜெயக்குமாரின் கருத்தை அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தான நேற்று ஆலசோனை கூட்டணி நடைபெற நிலையில், அதில் பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் கூட்டத்தை தொடர்ந்து அண்ணாமலை, தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கூறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்ணாமலை மாற்றப்படுவாரா.?
அதே நேரத்தில் பாஜகவின் தேசிய தலைமை நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் கூட்டணியில் அதிமுக இடம்பெற வேண்டும் என தீர்க்கமாக இருக்கும் சூழலில், தான் பாஜகவின் அண்ணாமலை இது குறித்து கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது.
மேலும், பாஜக தேசிய தலைமை இந்த விவகாரத்தில் நேரடியாக அதிமுக தலைவர்களுடன் பேசி பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மாநில பாஜக தலைவரை மாற்றும்படி அதிமுக கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.