வெளிவரப்போகும் மர்மங்கள்...சந்திராயன் 3 ரோவர் செய்யும் சோதனைகள் என்னென்ன?
நேற்று மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவர் மேற்கொள்ளப்போகும் சோதனைகளை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சந்திரயான் 3 பயணம்
இந்தியாவில் இருந்து நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்கலங்கள் திட்டம் தான் சந்திரயான். இதன் 3வது பகுதியான சந்திரயான் 3வது நேற்று நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கியது. முதல் நாடாக இந்தியா இந்த சாதனையை செய்திருக்கும் நிலையில், பல உலகநாடுகளின் கவனம் சந்திரயான் மேற்கொள்ள போகும் சோதனைகளை குறித்தே அமைந்துள்ளது.
முக்கிய சோதனைகள் என்னென்ன
இந்த ரோவர் 5 விதமான சோதனைகளை நடத்தவுள்ளது. அதாவது, The Instrument for Lunar Seismic Activity (ILSA) எனப்படும் ரோவர் தரையிறங்கும் இடத்திற்கு அருகிலுள்ள நில நடுக்கங்களை குறித்தும் சந்திரனின் மேல் பகுதி மற்றும் மேலோட்டத்தின் கலவையை ஆய்வு செய்யவுள்ளது.
The Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere (RAMBHA) எனப்படும் சந்திரனின் மேற்பரப்புக்கு அருகிலுள்ள எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகள் மற்றும் அவை காலப்போக்கில் எவ்வாறு மாறுகின்றன என்பதை ஆய்வு செய்யவுள்ளது.
The Alpha Particle X-ray Spectrometer (APXS) எனப்படும் சந்திர மண் மற்றும் பாறைகளில் உள்ள மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களின் கலவையை தீர்மானிக்கும் சோதனைகளும் நடைபெறவுள்ளன.
The Chandra’s Surface Thermo physical Experiment (ChaSTE) துருவப் பகுதிக்கு அருகிலுள்ள சந்திர மேற்பரப்பின் வெப்ப பண்புகளை ஆய்வு செய்யும். சந்திரயான்-3 தற்போது இறங்கியுள்ள இடத்தில் 70 டிகிரி வெப்பம் நிலவுகிறது.The LASER Induced Breakdown Spectroscope (LIBS) சந்திர மேற்பரப்பின் இரசாயன மற்றும் கனிம கலவையை தீர்மானிக்கும்.