திமுக பிரமுகர் வீட்டில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு....கைப்பற்றப்பட்டது என்னென்ன..?

Tamil nadu Coimbatore
By Karthick Sep 16, 2023 12:41 PM GMT
Report

இன்று காலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்ற நிலையில், அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

திமுக பிரமுகர்

கோவையை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி தமீம் அன்சாரி வீட்டில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். அந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில், தமீமிடம் இருந்து 2 செல்போன்கள் வாங்கி சென்றனர். அவரிடம் அரபிக் வகுப்பிற்கு சென்றீர்களா? என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்ததாக தகவல் வெளிவந்துள்ளன.

what-has-been-captured-in-nia-search

மேலும் நாளை, கோவை என்.ஐ.ஏ அலுவலகத்தில் தமீம் அன்சாரி ஆஜராக அதிகாரிகள் அறிவுறுத்தியத்தியதாகவும் கூறப்படுகிறது.  அதே போல, கோவை ஜி.எம்.நகரில் அபுதாஹிர், கரும்புக் கடையில் மன்சூர், குனியமுத்தூரில் சுகைல் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

75 லட்சம் பணம் பறிமுதல்

மேலும், சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் புஹாரி என்பவரது வீட்டிலும், சென்னை திருவிக நகரில் முஜ்புர் ரகுமான் மற்றும் அயனாவரம் மயிலப்பன் தெருவில் வசிக்கும் ஜக்கிரியா என்பவர் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. சோதனை மேற்கொள்ளப்பட்ட இவர்கள் மூவர் வீட்டிலிருந்தும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பென்டிரைவ் போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

what-has-been-captured-in-nia-search

வரும் 20ஆம் தேதி இவர்கள் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சோதனையில் முக்கிய ரூ 60 லட்சம் பணம், 18,200 அமெரிக்க டாலர்கள் என மொத்தம் ரூ 75 லட்ச ரூபாயும் ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.