பிரதமர் மோடியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தாரா நடிகர் மம்முட்டி..? - உண்மை இதுதான்!

Mammootty Narendra Modi Kerala India
By Jiyath Jan 19, 2024 10:49 AM GMT
Report

பிரதமர் மோடிக்கு, நடிகர் மம்முட்டி பதில் வணக்கம் செலுத்தாமல் கைகளை கட்டியபடி கண்டுகொள்ளாமல் நின்றதாக விவாதம் எழுந்தது.

திருமணம் 

மலையாள நடிகரும், பாஜக பிரமுகருமான சுரேஷ்கோபியின் மகளின் திருமணம் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பிரதமர் மோடியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தாரா நடிகர் மம்முட்டி..? - உண்மை இதுதான்! | What Happened In Suresh Gopi Daughter Wedding

இந்த திருமணம் பிரமதர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வரிசையாக நின்றிருந்த நடிகர்களுக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்தியபடி நடந்து சென்றார்.

பிரதமர் மோடியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தாரா நடிகர் மம்முட்டி..? - உண்மை இதுதான்! | What Happened In Suresh Gopi Daughter Wedding

அப்போது, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் பிரதமருக்கு பதில் வணக்கம் செலுத்தியதாகவும், நடிகர் மம்முட்டி வணக்கம் செலுத்தாமல் கைகளை கட்டியபடி கண்டுகொள்ளாமல் நின்றதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலானது.

தவறான பிரசாரம் 

இந்நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து விபரம் அறிந்தவர்கள் கூறுகையில் "நடிகர் மோகன்லாலுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அட்சதை வழங்கும்போது மம்முட்டி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றது உண்மைதான்.

பிரதமர் மோடியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தாரா நடிகர் மம்முட்டி..? - உண்மை இதுதான்! | What Happened In Suresh Gopi Daughter Wedding

மோகன்லாலுக்கு பிரதமர் வணக்கம் செலுத்துவதை மற்றொரு கோணத்தில் படம்பிடித்தபோது மம்முட்டிக்கு வணக்கம் செலுத்துவது போன்றும், மம்முட்டி கைகளை கட்டிக்கொண்டு நிற்பதுபோன்று தோன்றும். அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி தவறான பிரசாரம் செய்கின்றனர்.

ஆனால், அடுத்ததாக மம்முட்டியிடம் அட்சதை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அவரது கைகளை பிடித்தபடி சிறிதுநேரம் பேசினார். பிரதமர் வழங்கிய அட்சதையையும் மம்முட்டி பெற்றுக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளனர்.