ராணி எலிசபெத்தின் கல்லறை எப்படி இருக்கும் - வெளியான ரகசியம்
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி வயது முப்பின் காரணமாக உயிரிழந்தார்.
அவரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டது. இதை தொடர்ந்து இன்று உலக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இங்கிலாந்து நேரப்படி இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியை ஒளிபரப்ப பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள விண்ட்சர் கோட்டை மைதானத்தில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த கோட்டையின் தரையில் இருந்து சுமார் 16 அடி அதாவது 5 மீட்டர் கீழே உள்ளது தான் கல்லறை.
இங்கு அரச குடும்பத்தினரின் உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுகிறது. இந்த அரண்மனை ஏறக்குறைய 1000 ஆண்டுகள் மன்னர் ஆட்சிக்கு சொந்தமானது.
இந்த அரண்மனை 2ம் எலிசபெத்தின் மறைவு வரை முக்கிய இடமாக இருந்து வந்தது. இங்கு உள்ள பெட்டகமே ஒரு கல்லறை, 70 அடி நீளமும் (21 மீ) 28 அடி அகலமும் ( 8 மீட்டர் ) நுழைவாயிலில் அரும்பு கோட்டை மூலம் எப்போதும் மூடப்பட்டிருக்கும்.
இந்த அறைக்குள் 44 உடல்களை வைக்க போதுமான இடம் உள்ளது. இதுவரை கல் சுவர்களில் கட்டப்பட்ட அலமாரிகளில் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் மீதமுள்ள 12 அறைகள் மையத்தில் உள்ளன. ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள சவபெட்டியானது லிப்ட் மூலம் கல்லறைக்கு கொண்டு செல்லப்படும்.
செயின்ட் ஜார்ஸ் தேவாலயத்தில் 15 ஆம் நுாற்றாண்டிலிருந்து அரச குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
ராணி எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் 25 அரச குடும்பங்களின் உறுப்பினர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் மன்னர்கள், மனைவிகள், மற்றும் குழந்தைகள் அடங்குவர்..