11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார்
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு
மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கயானாவை தளமாகக் கொண்ட செய்தித்தாள் ஒன்று, முதலில் இந்த விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதன்படி, ஒரு 18 வயது பெண் உள்ளிட்ட 11 பெண்களை, அந்த பெயர் குறிப்பிடப்படாத கிரிக்கெட் வீரர் வன்கொடுமை, பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
பணத்தால் மறைக்க முயற்சி
மார்ச் 3, 2023 அன்று, தனக்கு 18 வயதாக இருக்கும் போது, பெர்பைஸின் நியூ ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு வீட்டில் வைத்து, கிரிக்கெட் வீரர் தன்னை வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, மற்ற பெண்களும் ஸ்கிரீன் ஷாட், குரல் பதிவு உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் அளிக்க முன்வந்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் நிர்வாகம், இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
ஆனால், இந்த புகார் குறித்து கிரிக்கெட் வீரர் மீது தற்போது வரை வழக்கு பதியப்படவில்லை என்றும், பணம் குடுத்து இந்த விடயத்தை மறைக்க அந்த கிரிக்கெட் வீரர் முயற்சித்தார். ஆனால் எங்களுக்கு பணம் வேண்டும், எங்களின் மகளுக்கு நீதி வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வரலாற்று வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்ற போது, இந்த கிரிக்கெட் வீரருக்கு பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.