ஊரே வெள்ளத்தில மிதக்குது... இந்த ஜோடிக்கு அண்டால கல்யாணம் கேட்குதாம்

kerala keralaflood weddingincookingvessel
By Petchi Avudaiappan Oct 18, 2021 09:10 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக திருமணம் மண்டபத்துக்கு சமையல் பாத்திரத்தில் சென்ற ஜோடியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் மாநிலத்தின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்கள் விடுக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரணகளத்துக்கு இடையே மகிழ்ச்சியான திருமண சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆழப்புழாவை சேர்ந்த திருமண ஜோடி ஒன்றை வெள்ளம் நிறைந்த சாலைகளில் ஒரு பெரிய அலுமினிய சமையல் பாத்திரத்தில் அமர வைத்து திருமண வீட்டார் அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.