ஆபத்தில் முடிந்த ஆஹா கல்யாணம் அந்தரத்தில் பறந்த மணமக்கள் - நடந்தது என்ன?

wedding viralvideo nightmarebride
By Irumporai Dec 14, 2021 06:45 AM GMT
Report

 திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகின்றன என்பது பழமொழி , குறிப்பாக இந்தியாவில் திருமணத்தை பெரிய திருவிழாவாகவே கொண்டாடுவார்கள். அவரவர்களின் வசதிக்கு ஏற்ப அந்தக் கொண்டாட்டம் இருக்கும்.

இப்போதெல்லாம் திரைப்பட பாணியில் பிரம்மாண்டமாக திருமண கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால்,அப்படி ஆடம்பரமாக நடத்தப்படும் திருமணங்கள்சில சமயம் ஆபத்திலும் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில், அப்படியான ஒரு திருமண கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராய்பூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் வளையம் மாதிரியான ஸ்டேஜில் நிற்க வைக்கப்பட்டு கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்டனர்.

மேடையில் பாடல் ஒலிக்க,சுற்றிலும் சிலர் நடனம் ஆட ஒரு அழகான படக்காட்சி போல இதனை உருவாக்கியுள்ளனர் இந்த பிரம்மாண்டத்தை பார்த்த பலரும் ஆஹாவென கையில் இருக்கும் போனை வைத்து படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஆபத்தில் முடிந்த ஆஹா கல்யாணம்  அந்தரத்தில் பறந்த மணமக்கள் - நடந்தது என்ன? | Wedding Turns Nightmare Watch Viral Video

அப்போது எதிர்பாராத விதமாக மணமக்கள் ஏறி நின்ற வளைய மேடை அந்தரத்தில் இருக்கும் போதே ஒருபக்கமாக சரிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத உறவினர்கள் அலறியடித்துக் கொண்டி ஓடிச்சென்று மணமக்களை காப்பாற்றினர்.

இந்த விபத்தில் மணமக்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திருமண விபத்து வீடியோவை பகிர்ந்த பலரும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டங்கள் இருப்பது தவறில்லை. அதே நேரத்தில் அதனை பாதுகாப்பாக நடத்த வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் .

இருமனம் சேரும் திருமண விழா ஆனந்தமாக இருக்க வேண்டும் அதே சமயம் , ஆடம்பரம் என்ற பெயரில் ஆபத்தில் முடியக்கூடாது.