மணமேடையில் எல்லோர் முன்பு பதற்றமடைந்த மணமகன் - அடுத்து நடந்தது என்ன?
திருமண மேடையில் தாலிக்கட்டும்போது மணமகன் பறிதவித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வழக்கமாக மணப்பெண்கள்தான் திருமணமேடையில் பதட்டமாக இருப்பார்கள். ஆனால், இந்த வீடியோவில் மணமகன் ரொம்ப பதட்டமாகி இருக்கிறார்.
காரணம் எனென்னா... திருமண மேடையில், மணமகன் தாலிச்செயினை எடுத்து மணமகள் கழுத்தில் அணிய வைக்க சென்றார்.
அப்போது அந்த தாலிச்செயின் மணமகளின் தலையிலிருந்து கழுத்திற்கு இறங்கவே இல்லை.
தலையிலேயே மாட்டிக் கொண்டது. இதனால், தாலி கட்ட முடியாமல் மணமகன் மிகுந்த பதற்றமடைந்தார். ஒரு கட்டத்தில் அவர் முகமெல்லாம் வியர்த்துவிட்டது.
எப்படியோ தாலியை மணமகன் கட்டிவிட்டார். இதையெல்லாம் பார்த்த மணமகள் சிரித்தே விட்டாள்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.