சுடுகாட்டில் நடைபெற்ற பெண்ணின் விநோத திருமணம் - தந்தை சொன்ன காரணம் தெரியுமா?
தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தை சுடுகாட்டில் நடத்தியுள்ளார்.
சுடுகாட்டில் திருமணம்
மகாராஷ்டிரா மாநிலம் ரகாதா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் கெய்க்வாட். இவர் கடந்த 20 ஆண்டுகளாக சுடுகாட்டில் வேலை செய்கிறார். இவருக்கு மயூரி என்ற மகள் உள்ளார். இவர் விநோதமாக தனது மகளின் திருமணத்தை சுடுகாட்டில் நடத்தியுள்ளார்.
திருமண விழாவில் குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தந்தை சொன்ன காரணம்
இதுகுறித்து கூறிய கங்காதர் கெய்க்வாட் "நான் 20 ஆண்டுகளாக இங்குதான் வேலை செய்தேன். எனது மகளும் இங்குதான் வளர்ந்தால், இங்கிருந்து தான் படித்தால். எங்களது வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொடுத்தது இந்த சுடுகாடுதான். அதனால்தான் திருமணத்தை இங்கேயே நடத்தினோம் என்று கூறியுள்ளார்.