சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட சேனலுக்கு சீல்!! பின்னணி அதிரடி பின்னணி என்ன..?

Delhi India
By Karthick Oct 03, 2023 12:17 PM GMT
Report

இந்திய தலைநகர் டெல்லியில் பிரபல தனியார் இணையதள செய்தி சேனலான நியூஸ் கிளிக் அலுவலகதிற்கு டெல்லி காவல் துறையினர் சீல் வைத்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

காவல்துறை சோதனை

டெல்லியில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் இணையதள செய்தி சேனல் நியூஸ் கிளிக். இந்த சேனல் மீது அமலாக்கத்துறை வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று செயல்பட்டது என்றும் 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 38.05 கோடி ரூபாய் பணம் பெற்றது அமலாக்கத்துறையில் வழக்குள்ளது.

web-channel-sealed-in-delhi-due-to-link-with-china

இந்நிலையில், இன்று காலை முதல் திடீரென இந்த சேனலின் அலுவலகத்தில் டெல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சேனல் அலுவலகம் மட்டுமின்றி, அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்கள் வீடுகள் உட்பட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையை தொடர்ந்து 2 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சீல் வைக்கப்பட்ட அலுவலகம்

அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம், நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வரும் சூழலில், நியூஸ் கிளிக் செய்தி இணைய தளம் மீது "ஊபா" சட்டம் பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

web-channel-sealed-in-delhi-due-to-link-with-china

சோதனைகள் முடிவடைந்த நிலையில், சேனல் அலுவலகத்திற்கு காவல் துறையினர் பூட்டி சீல் வைத்து சென்றுள்ளனர். இது பெரும் சலசலப்பை அம்மாநிலத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது. நியூஸ் கிளிக் இணையதள சோதனைக்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை கவலைதருகிறது. இச்சோதனை குறித்த விவரங்களை விளக்கமாக தர வேண்டும் என பிரஸ் கிளப் ஆப் இந்தியா வலியுறுத்தி உள்ளது.