தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம்; வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu DMK
By Jiyath Aug 27, 2023 10:10 AM GMT
Report

நாகை எம்.பி செல்வராஜ் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

திருவாரூரில் இன்று நாகை எம்.பி செல்வராஜ் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம்; வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | We Have Saved Tamil Nadu India Should Be Saved I

அவர் பேசியதாவது 'உழவர்களுக்காக நாகையில் 50 இடங்களில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் எம்பி செல்வராஜ். மேலும் செல்வராஜ் 4 முறை எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார்.

பேச்சு 

அனைத்து தடவையும் திமுக கூட்டணியில் இருந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்தே தொடங்கிவிட்டேன். கம்யூனிஸ்ட் கட்சி உடனான கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் .

தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம்; வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | We Have Saved Tamil Nadu India Should Be Saved I

தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் . மும்பையில் நடைபெற உள்ள 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.