‘’ சண்டைய உக்ரைன் நிறுத்தினால் பேச்சு வார்த்தைக்கு நாங்க ரெடி ‘’ : ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன.
அதே சமயம் , உக்ரைன் தங்களை காத்து கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது .
தற்போதைய சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன
இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இது குறித்து கூறுகையில் அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம்.
உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறியுள்ளார்.