கோட்சே கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கமே இல்லை : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி
காரைக்குடியில் நேற்று அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
அடிமை மனநிலை
மேலும், ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்தின் உதாரணமாக காட்டுவது சார்லஸ் டார்வினை பரிமாண வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையினை காட்டுவதாக தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மதுரை எம்பி சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் ,
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 22, 2023
ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது...
புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான். pic.twitter.com/ECnwZwQiBk
எங்களுக்கு பெருமை தான்
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது.
புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான் என பதிவிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil