காவிரி விவகாரம்...தமிழகத்தின் உரிமையை தான் கேட்கிறோம்...துரைமுருகன்
காவிரி தண்ணீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரை தான் கேட்கிறோம் என தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா அரசிற்கும், தமிழக அரசிற்கும் தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்பட்டுவருகின்றது. இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை துவங்கியுள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.
எங்கள் உரிமையை தான் கேட்கிறோம்
காவிரி நதிநீர் பங்கீட்டில் தாங்கள் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரை தன கேட்கிறோம் என குறிப்பிட்ட துரைமுருகன், கிட்டதட்ட 50 டி.எம்.சி நீர் தமிழகத்தில் பற்றாகுறையாக உள்ளது என தகவல் தெரிவித்தார். தண்ணீர் இல்லாத காலம் தங்களுக்கு இருக்கிறது என கர்நாடக சொல்லும் நிலையில், எவ்வாறு பங்கீடு செய்யவேண்டும் என்பதை காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசிற்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உரிமை இல்லாத பிரச்சனையில் தமிழகத்தை இழுக்கப்பார்கிறார்கள் என சாடினார்.