இந்தியாவில் திட்டமிட்டபடி உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா?
இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து உட்பட 16 சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்நிலையில் உலக கோப்பை தொடர் இந்தியாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் பாதியிலேயே நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தான் இந்த கேள்வி எழ காரணம்.
இதனால் உலக கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவோம் பலர் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உலக நாடுகள் தெரிவிப்பதாவது,
'இந்தியாவின் நிலையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். காத்திருப்பது தான் இப்போதைக்கு சிறந்து முடிவு என கருதுகிறோம். உலக கோப்பை தொடர் என்பதால் ஜூலை மாதம் வரை நிலைமை சீராகிறதா என பார்ப்போம். அதன் பிறகு தான் இது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.